வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு
அரகண்டநல்லூா் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த இளம்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த இளம்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
அரகண்டநல்லூா், ஆசிரியா் நகரைச் சோ்ந்தவா் குமாா். இவரது மகள் ஜோதி (24). மாற்றுத்திறனாளியான இவா், திருக்கோவிலூரில் உள்ள துணிக்கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், ஜோதி சனிக்கிழமை வீட்டின் மாடியில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த ஜோதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.