மார்கழி மாத உத்ஸவம்

திருப்பாவை - பாடல் 5

ஆய்ப்பாடியில் வாழும் சிறுமிகள் தங்களுடன் விளையாடும் கண்ணனை, மாய விளையாட்டுகள் விளையாடும் சிறுவன் என்று எண்ணி விடாமல்,

என். வெங்கடேஸ்வரன்

   மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

   தூய பெருநீர் யமுனைத் துறைவனை

   ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

   தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

   தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

   வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து

   போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

   தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
 

பாடியவர் பவ்யா ஹரி

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">ஆய்ப்பாடியில் வாழும் சிறுமிகள் தங்களுடன் விளையாடும் கண்ணனை, மாய விளையாட்டுகள் விளையாடும் சிறுவன் என்று எண்ணி விடாமல், அவன் திருமாலின் அவதாரம் என்பதை புரிந்து கொண்டு, மனம் மெய் மொழிகளால் அவனை வணங்கி துதிக்க வேண்டும் என்பது இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. அவ்வாறு வழிபட்டால், நம்மைப் பற்றியுள்ள தீவினைகளும், பற்றவிருக்கும் தீவினைகளும், தீயினில் இடப்பட்ட தூசுகள் போன்று அழிந்துவிடும் என்பதும் உணர்த்தப்படுகின்றது. நம்மிடையே வளர்ந்தாலும், அவன் மதுரையில் பிறந்து மாயமாக நம்மிடையே வந்து கலந்தவன் என்பதை உணர்த்தும் வண்ணம், வடமதுரை மைந்தன் என்று கண்ணனை ஆண்டாள் இங்கே குறிப்பிடுகின்றார்.<br /> </p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">பலவிதமான மாயங்கள் செய்து நம்முடன் விளையாடும் கண்ணன், நம்மில் ஒருவன் அல்லன்; அவன் வடமதுரையில் பிறந்து, எவரும் அறியாத வண்ணம் மாயமாக ஆய்ப்பாடி வந்து தங்கியவன்; தூய்மையான, வளமையான யமுனை நதியின் கரையில் வளர்பவன்; அவன் ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய விளக்காவான்; அவன் பெற்ற தாயின் புகழ் உலகெங்கும் ஓங்கி விளங்கச் செய்தவன்; வல்லமை படைத்தவனாக விளங்கியபோதும், யசோதைத் தாய் அவனை தாம்புக் கயிற்றினால் கட்டியபோது, மிகவும் எளியவனாக கட்டுண்டவன்; இத்தகைய சிறப்புகள் பெற்ற கண்ணனை, நாம் அனைவரும் அகத் தூய்மையும் புறத் தூய்மையும் கொண்டவர்களாய், மலர்களை அவன் மீது தூவியும், அவனது புகழினை நமது வாயினால் பாடியும், அவனது பெருமை மிகுந்த குணங்களை நமது மனதினில் சிந்தித்தும் அவனை வழிபடுவோம். அவ்வாறு அவனை வழிபட்டால், நாம் இந்நாள் வரை சேமித்து வைத்துள்ள பாவங்களும், இனி வரப்போகும் நாட்களில் அறியாமையால் நாம் செய்யவிருக்கும் பாவங்களும், நெருப்பினில் இடப்பட்ட தூசு போன்று காணாமல் போய்விடும். இந்த செய்தியை நாம் ஒருவருக்கு ஒருவர் சொல்லியவாறு நீராடுவோம்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT