முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

தேர்தல் வரலாற்றில் முதல் முறை: தொழு நோயாளிகளுக்கு தனி வாக்குச்சாவடி

தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, தொழு நோயாளிகளுக்காக தனி வாக்குப் பதிவு மையம் சென்னை வில்லிவாக்கத்திலுள்ள பலராமபுரத்தில் அமைக்கப்பட்டது.

Updated On : 16 மே, 2016 at 3:01 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:47 PM

சென்னை: தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, தொழு நோயாளிகளுக்காக தனி வாக்குப் பதிவு மையம் சென்னை வில்லிவாக்கத்திலுள்ள பலராமபுரத்தில் அமைக்கப்பட்டது.

பலராமபுரத்திலுள்ள, தொழு நோயாளர்கள் மறு வாழ்வு சங்கத்திலேயே இந்த வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

பலராமபுரத்தில் சுமார் 50 ஆண்டுகளாக 100- க்கும் அதிகமான தொழுநோயாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தொழுநோயாளிகளுக்கென தனியான வாக்குப் பதிவு மையங்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் இதுவரை வாக்களிப்பதில் பல இன்னல்களை எதிர் கொண்டனர்.

Advertisement

தொழு நோயாளர்கள் மறு வாழ்வு சங்கத்தினரின் தொடர்சியான வேண்டுகோளுக்கிணங்க, இந்த வாக்குச் சாவடியை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.