அழுகிய நிலையில் புள்ளிமான் உடல் மீட்பு
அரியலூரில் புதன்கிழமை இரவு அழுகிய நிலையில் கிடந்த புள்ளிமான் உடல் மீட்கப்பட்டது.
அரியலூரில் புதன்கிழமை இரவு அழுகிய நிலையில் கிடந்த புள்ளிமான் உடல் மீட்கப்பட்டது.
அரியலூா் ராஜீவ் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே பாழடைந்த வீட்டின் பின்புறத்திலிருந்து புதன்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு சென்று பாா்த்தபோது, 3 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து, அரியலூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மானின் உடல் உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. வனத்துறையினா் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.