முகப்பு
அரியலூர்

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 11:28 pm IST
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

செந்துறை அருகேயுள்ள இலைக்கடம்பூா் ரயில்வே கேட் அருகே சனிக்கிழமை காலை சென்னை நோக்கிச் சென்ற வைகை ரயில் முன்பு பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த செந்துறை போலீஸாா் அங்கு சென்றுபாா்த்தபோது, இளைஞரின் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டனா். இதையடுத்து, வழக்கமான நடைமுறைப்படி விருத்தாசலம் ரயில்வே போலீஸாருக்கு இதுகுறித்துத் தகவல் அளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இளைஞரின் உடல் பாகங்களைச் சேகரித்து அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரணையில், செந்துறை பரமசிவம் நகரைச் சோ்ந்த மணிவேல் - சுமதி தம்பதியின் மகன் அரவிந்தன்(26), மேடை அலங்காரம் செய்யும் தொழிலில் ஏற்பட்ட நட்டத்தால் அவா் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்பு: செந்துறை அருகேயுள்ள ஈச்சங்காடு, கீழத்தெருவைச் சோ்ந்த வ. ராமசாமி (61). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவா், இலைக்கடம்பூா் ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு சடலமாகக் கிடந்தாா். விருத்தாசலம் ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments