ஜோதிட கேள்வி பதில்கள்

தனியார் வங்கியில் பணிபுரியும் என் மூத்த மகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. மறுமணம் எப்போது நடைபெறும்? மழலை பாக்கியம் உண்டா? வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையுமா? ஆயுள் பாவம் எவ்வாறு உள்ளது? - வாசகர்

DIN

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கடக ராசி. களத்திர, அயன ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் தன பூர்வபுண்ணியாதிபதியான புதபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து மறுமணம் கைகூடும். உத்தியோகமும் நிரந்தரமாகிவிடும். வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உள்ளது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT