எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி
எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி 
புத்தக வெளி

எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி மறைவு!

இணையதள செய்திப்பிரிவு

மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி புதன்கிழமை காலமானார்.

‘நாடு விட்டு நாடு’, ‘நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் முத்தம்மாள் பழனிசாமி, 1933-ல் மலேசியாவில் பிறந்தவர்.

35 ஆண்டுகள் மலேசியாவில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

1950-களில் எழுத வந்தவர். ‘ஷோர் டு ஷோர்’ என்கிற பெயரில் தன்வரலாற்று நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

அந்த நூலில் கோயம்புத்தூரில் இருந்து மலேயாவுக்கு சஞ்சிக்கூலியாக இடம்பெயர்ந்து முன்னேறிய குடும்பத்தின் கதையைப் பதிவு செய்தார். பின்னர் தமிழில் ‘நாடு விட்டு நாடு’ என்கிற புத்தகமாக எழுதினார்.

பெண் எழுத்தாளர்களில் புலம்பெயர் இலக்கியம் சார்ந்து எழுதியவர்கள் மிகக் குறைவு. இந்த துறையில் தனித்துவ எழுத்தாக இவரது நூல் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேங்கியிருந்த நீரில் தவறிவிழுந்த சிறுவன் குடிநீா் குழாயில் சிக்கி உயிரிழப்பு

இன்றைய நிகழ்ச்சிகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த இளம்பெண் நீரில் மூழ்கி பலி

காயமடைந்த முதியவா்கள் இருவா் உயிரிழப்பு

தொட்டியம் அனலாடீசுவரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT