முகப்பு
மத்திய பட்ஜெட்

41% - மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் மாற்றமில்லை! தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு!!

பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 6:47 AM
பகிர்:

நாட்டில் மாநிலங்களுக்கான ரூ. 1.4 லட்சம் கோடி நிதி விடுவிக்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அவர் பேசுகையில்,

"2027 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, காலவரையறை நிர்ணயிக்கப்பட்ட பத்திரங்கள் மூலம் ரூ. 11.7 லட்சம் கோடி அரசு கடன் வாங்க உள்ளது.

வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கான வரி விலக்கு அளிக்கப்படும்.

16 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான வரி பகிர்வில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41% ஆகவே தொடரும்.

2026 -27 ஆம் நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கான ரூ. 1.4 லட்சம் கோடி நிதி விடுவிக்கப்படும்.

வரும் ஏப்ரல் முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும்.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான டிடிஎஸ் 5 சதவீதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

முன்னதாக, நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Budget 2026: allocated Rs 1.4 lakh crores for states for FY2026-27

முழு கட்டுரையைப் படிக்க →