வர்த்தகம்

சில்லறைப் பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு

தினமணி

நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 3.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
 நுகர்வோர் விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3.69 சதவீதமாக காணப்பட்டது. இது 10 மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.
 கடந்தாண்டு செப்டம்பரில் சில்லறைப் பணவீக்கம் 3.28 சதவீதமாக காணப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு இதே கால அளவில் இந்தப் பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்குள்ளாகவே பணவீக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 சென்ற செப்டம்பரில், உணவு தானியங்கள், இறைச்சி, முட்டை, பால் பொருள்களுக்கான சில்லறைப் பணவீக்கம் அதிகரித்தே காணப்பட்டது.
 அதேசமயம், பழ வகைகளுக்கான பணவீக்கம் மிதமான அளவிலேயே இருந்தது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT