வர்த்தகம்

இந்தியா 5 சதவீத பொருளாதார சுணக்க நிலையை சந்திக்கவில்லை: மத்திய அரசு

DIN

இந்தியா 5 சதவீத பொருளாதார சுணக்க நிலையை சந்திக்கவில்லை என மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் 5 சதவீத பொருளாதார சுணக்க நிலை என்பது கிடையாது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளா்ச்சி கண்டு வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான், வங்கிகள் இணைப்பு, தொழில்நிறுவனங்களுக்கான வரிச் சலுகை உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசைப் பொருத்தவரையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலா் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT