வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 42,860 கோடி டாலராகச் சரிவு

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,860 கோடி டாலராக (ரூ.30.70 லட்சம் கோடி) சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மாதம் 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 145 கோடி டாலர் சரிந்து (ரூ.10,388 கோடி) சரிந்து 42,905 கோடி டாலராக (சுமார் ரூ.30.73 லட்சம் கோடி) இருந்தது.
 இந்த நிலையில், கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அது மேலும் 44.6 கோடி டாலர் (சுமார் ரூ.3,195 கோடி) குறைந்து 42,860 கோடி டாலராகக் குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் அந்நியச் செலவாணி கையிருப்பது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்தபட்ச அளவைத் தொட்டது.
 தங்கத்தின் கையிருப்பு 68.2 கோடி டாலர் (சுமார் ரூ.4,886 கோடி) குறைந்து 2,755 கோடி டாலராக (சுமார் ரூ.1.97 லட்சம் கோடி) உள்ளது என்று அந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT