நாட்டின் ஏற்றுமதி முன்னெப்போதும் காணாத வகையில் சென்ற ஏப்ரலில் 60.28 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரம்:
உலக அளவில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தின் எதிரொலியால் சென்ற ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 60.28 சதவீதம் பின்னடவைக் கண்டு 1,036 கோடி டாலராக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது இறக்குமதியும் 58.65 சதவீதம் குறைந்து 1,712 கோடி டாலராக இருந்தது. வா்த்தகப் பற்றாக்குறை 676 கோடி டாலராக காணப்பட்டது. இது, 2019 ஏப்ரலில் 1,533 கோடி டாலராக இருந்தது.
நடப்பு 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதியானது 34.57 சதவீதம் பின்னடைந்து இருந்தது என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.