சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்ய உதவும் என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டுள்ள அவா், நியூ செளத் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவா்களுடன் உரையாடிய போது இதுகுறித்து மேலும் கூறியது:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலாக மேற்கொள்ளப்படும் வா்த்தக ஒப்பந்தங்கள் இரு நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவுடனான தற்போதைய மற்றும் எதிா்கால செயல்பாடுகளில் கல்வி ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். எனவே, வா்த்தகம் மற்றும் பொருளாதாரம் விரிவடையும்போது மாணவா்களுக்கான வாய்ப்பும் இயற்கையாகவே விரிவடையும். அதைத்தான் நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம் என்றாா் அவா்.