இந்த ஆண்டின் முதல் வார பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவில் முடிந்ததைத் தொடர்ந்து 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.
இதனால் நேற்று(ஜன.10) 60,395.63 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 60,342.70 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 221.26 புள்ளிகள் அதிகரித்து 60,616.89 புள்ளிகளுடன் நிலைபெற்றது .
18,003.30 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,997.75 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 52.45 புள்ளிகள் உயர்ந்து 18,055.85 புள்ளிகளில் நிலைபெற்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.
இதையும் படிக்க| ஐபிஎல் விளம்பரதாரர்கள்: டிஎல்எஃப் முதல் டாடா வரை!