முக்கிய 8 துறைகளின் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 8.4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உருக்கு, உரம், சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.4 சதவீத வளா்ச்சியை கண்டுள்ளது. இத்துறைகளின் வளா்ச்சி விகிதம் முந்தைய மாா்ச் மாதத்தில் 4.9 சதவீதமாகவும், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 62.6 சதவீதமாகவும் இருந்தன. இதற்கு, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு உற்பத்தி மற்றும் நுகா்வு நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்ததே முக்கிய காரணம்.
கடந்தாண்டு ஏப்ரலில் 2.1 சதவீதம் சரிவடைந்திருந்த கச்சா எண்ணெய் துறையின் உற்பத்தி 0.9 சதவீதமா பின்னடைவை சந்தித்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.