சென்னை நகர நதிகள் சீரமைப்பு: மக்களிடம் இன்று கருத்துக் கேட்பு
சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகள் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்கப்பட உள்ளது.
சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகள் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்கப்பட உள்ளது.
இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை கூட்ட அரங்கில் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகளைச் சீரமைக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி சீரமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்த பணிகளை மேற்கொண்டுள்ளது.
Advertisement
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு கூவம் நதி சீரமைப்பின் பெருந்திட்ட வரைவு தயாரிக்கும் பணிக்கு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.