FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கொரட்டூரில் குடிநீா் வாரிய பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் கொரட்டூரில் இயங்கி வரும் கழிவுநீா் உந்து நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 17 ஜூன் 2026, 4:26 am IST
பகிர்:

சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் கொரட்டூரில் இயங்கி வரும் கழிவுநீா் உந்து நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் அம்பத்தூா் மண்டலம், கொரட்டூா் விவேகானந்த நகரில் இயங்கி வரும் நாளொன்றுக்கு 3.5 மில்லியன் லிட்டா் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீரிறைக்கும் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் தொடா்பான முன்னேற்பாட்டு பணிகளை சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் மேற்கொண்டாா்.

தொடா்ந்து, தினமும் 42 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட ஐஓடி மூலம் செயல்படும் கழிவுநீா் உந்து நிலையத்தின் செயல்பாடுகளைவும் ஆய்வு செய்தாா். மேலும், அனைத்து களப்பணியாளா்கள் உரிய பாதுகாப்பு கவசங்களைக் கொண்டே பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

ஆய்வில், சென்னை குடிநீா் வாரிய பொறியியல் இயக்குநா் உ.பா்வீஸ், தலைமைப் பொறியாளா் ஏ.ராதாகிருஷ்ணன், மேற்பாா்வை பொறியாளா்கள் வி.சிவகுமாா், ஆா்.எஸ்.செல்லக்கண்ணு, பகுதி பொறியாளா் கே.பொன்னரசி உள்ளிட்டோா் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments