தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ததை, நடிகர் பொன்வண்ணன் புதன்கிழமை திரும்பப் பெற்றார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம்:
நடிகர்கள் கார்த்திக், விஷால் என்னைவிட வயதில் சிறியவர்கள். நான் என்ன சொன்னாலும் கேட்கக் கூடியவர்கள். அதேசமயம் நாசர் என்னைவிட மூத்தவர். நான் எது சொன்னாலும் அதை எடுத்துக் கொள்வார். நான் அவர்களைவிட ஒரு படி மேல் சென்று பணியாற்ற வேண்டிய கட்டத்தில் இருப்பதால், அந்தப் பொறுப்பை (நடிகர் சங்க துணைத் தலைவர்) மீண்டும் ஏற்றுகொண்டு நண்பர்களுடன் இணைந்து நடிகர் சங்க கட்டடத்துக்காக என் பணியினை தொடர்ந்து மேற்கொள்வேன்.
அதேசமயம், என் தனிபட்ட கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நடிகர் சங்கத்தில் இருந்து கொண்டு, அரசியலில் யாரும் பணியாற்றுவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை என்று பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.