செய்திகள்

ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் கங்கை அமரன்!

கங்கை அமரன் ரஜினியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்...

எழில்

தமிழகம், இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள 8 தொகுதிகளுக்கும், கேரள மாநிலத்தில் மக்களவைக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள மலப்புரம் தொகுதிக்கும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தார். இதில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டார். கங்கை அமரன் பெயரை பாஜக தலைமைக்கு தாம் பரிந்துரை செய்ததாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏப்ரல் 12 -ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன், திமுக சார்பில் மருதுகணேஷ், ஓபிஎஸ் அணிக்கு மதுசூதனன், பாஜக சார்பில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கங்கை அமரன் ரஜினியை இன்று நேரில் சந்தித்தார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன்  போட்டியிடுவதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய மைல் கல்

சிலம்பம் மண்ணின் கலாசாரம்...

உறவு

மூலிகை மருத்துவம்...

தமிழர்களின் அடையாளம்!

SCROLL FOR NEXT