செய்திகள்

பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் காலமானார்! 

தெனாலி, சாமி, திமிரு உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ப்ரியன்(53) இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.  

DIN

சென்னை: தெனாலி, சாமி, திமிரு உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ப்ரியன்(53) இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.  

தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்தவரான இவரின் இயற்பெயர் நாகேந்திரன். அவர் தன்னுடைய திரைப்பயணத்தை பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி ஒளிப்பதிவாளராக துவக்கினார். அவருடன் முன்றாம் பிறை. சத்மா உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். அவரிடம் இருந்து விலகியவுடன் ராஜிவ் மேனன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தார்.

பின்னர் இயக்குநர் அதியமான் இயக்கத்தில் 1995-இல் வெளிவந்த 'தொட்டாச் சிணுங்கி' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்னர் கமலின் 'தெனாலி', விஜயின் 'வேலாயுதம்' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆனால் பிரபல ஆக்ஷன் இயக்குநர் ஹரியின் 14 படங்களிலும் அவருடன் இணைந்து ஒளிப்பதிவு செய்த அளவில் மிகவும் புகழ்பெற்றவர்.

இந்நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்ட அவர் காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் முக்கோண காதல்... திருமாங்கல்யம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

வயர்லெஸ் பவர் பேங்க்! போட் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

ஓபிசி ஆணையத்துக்கு அங்கீகாரம் வழங்கியது ராகுல் அல்ல, பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்!

குறையும் தங்கம் விலை? குழப்பத்தில் முதலீட்டாளர்கள்! மக்கள் நிலை கவலைக்கிடம்!

காஸாவுடன் மீண்டும் போர்நிறுத்தம் - இஸ்ரேல் அறிவிப்பு!

SCROLL FOR NEXT