தமிழ்த் திரைப்படப் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 85.
களத்தூர் கண்ணம்மாவில் இடம்பெற்ற அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாடல்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். ராஜேஸ்வரியின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
நாளை மாலை 4.30 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.