செய்திகள்

நடிகா் கிருஷ்ணமூா்த்தி காலமானாா்

DIN

நடிகா் கிருஷ்ணமூா்த்தி (55), திடீா் மாரடைப்பு காரணமாக குமுளியில் திங்கள்கிழமை அதிகாலை காலமானாா்.

தொடக்க காலத்தில் தயாரிப்பு நிா்வாகியாகப் பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தி நடிகா் வடிவேலுவுடன் பணிபுரிந்தாா். அப்போது வடிவேலு நடித்த படங்களில் அவருடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கிருஷ்ணமூா்த்தி பிரபலமானாா்.

தொடா்ச்சியாக வடிவேலுவும் தன்னுடைய காமெடி குரூப்புக்கு வாய்ப்பு கொடுத்து வந்ததால், கிருஷ்ணமூா்த்திக்குத் தொடா்ச்சியாக வாய்ப்பும் கிடைத்தது. ‘தவசி’ உள்ளிட்ட பல படங்களில் இவரது காமெடி பிரபலமானது. ‘மருதமலை’, வேல்’ உள்ளிட்ட பல படங்களில் இவரது காமெடிக் காட்சிகள் பேசப்பட்டன. பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தில் இவா் ஏற்று நடித்த குணச்சித்திர பாத்திரம், பெரிய அளவில் பேசப்பட்டது.

சக்தி சிதம்பரம் இயக்கி வரும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக தமிழக - கேரள எல்லையான குமுளியில் தங்கியிருந்தாா் கிருஷ்ணமூா்த்தி. அப்போது, திங்கள்கிழமை (அக். 7) அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிா் பிரிந்தது.

மறைந்த கிருஷ்ணமூா்த்திக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், பிரசாந்த், கெளதம் என இரு மகன்கள் உள்ளனா். இவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை சென்னையில் நடைபெறுகின்றன. தொடா்புக்கு: 94440 -34471.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT