செய்திகள்

விவாகரத்து என்றால் என்னவென்று தெரியுமா?: வனிதா விஜயகுமார் கேள்வி!

DIN

கேலி, விமர்சனங்களால் தன்னுடைய புகழ், வருமானம் அதிகமாகியுள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகப் புகழை அடைந்தார். 

நடிகர் ஆகாஷை முதலில் திருமணம் செய்த வனிதா, 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். ஆனந்த் ராஜனை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு 2012-ல் ஆனந்த் ராஜனையும் வனிதா விவாகரத்து செய்தார். வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனும் ஜோவிதா, ஜெய்நிதா என்கிற இரு மகள்களும் உள்ளார்கள். மகன் ஸ்ரீஹரி ஆகாஷுடனும் இரு மகள்கள் வனிதாவுடனும் வசித்து வருகிறார்கள். 

சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி விஜயகுமார் - விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் ஆகியோரின் திருமணம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள்.

எனினும், திடீர் திருப்பமாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41), வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளன. என்னிடம் விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணம் செய்துள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்குச் சில நாள்களுக்கு முன்பே அவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். 

சமூகவலைத்தளங்களில் தன்னைப் பலரும் கேலியும் விமரிசனமும் செய்வதால் தன்னுடைய வருமானம் அதிகரித்துள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். திருமண சர்ச்சை குறித்து நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய யூடியூப் தளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

என் சந்தோஷத்தையே சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்தினேன். யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சிலர் என்னைப் பார்த்து, இவருடைய முதல் கணவர், இரண்டாவது கணவர் யார் என்று தெரியுமா என்றெல்லாம் எழுதுகிறார்கள். இது முட்டாள்தனம். உங்களுக்கு எல்லாம் விவாகரத்து என்றால் என்ன என்று தெரியுமா? விவாகரத்திலேயே பல விஷயங்கள் உள்ளன, அது தெரியுமா? ஏழு வருடங்கள் பிரிந்து வாழ்ந்தால் அது என்ன பிரிவு எனத் தெரியுமா? சட்டத்தைப் பத்தி எதுவும் தெரியாமல் எதற்காக கேலி செய்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? வழக்கறிஞரா? உங்களுக்கு எதற்கு இவ்வளவு வாய்?

நான் எப்போதும் உண்மையைத்தான் பேசியுள்ளேன். இதையும் துணிச்சலுடன் உங்களிடம் சொல்கிறேன். ஏனெனில் மறைக்க எதுவுமில்லை. திருமண சர்ச்சையால் என்னுடைய (யூடியூப்) வியூவ்ஸ் பத்து மடங்கு அதிகமாகியுள்ளது. நீங்கள் என்னைத் திட்டுவதால், கிளிக் செய்வதால் நான் பணம் தான் சம்பாதித்துகொண்டு இருக்கிறேன். என்னை நம்புபவர்கள் மட்டும் என் சேனலைப் பார்க்கவும். இதனால் என் புகழ் அதிகமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT