செய்திகள்

போலிக் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கும் ட்விட்டர் நிறுவனம்: நடிகை நிவேதா பெத்துராஜ் தகவல்

தன் பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

DIN

தன் பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

துபையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் கணக்கு குறித்து நிவேதா பெத்துராஜ் தகவல் அளித்துள்ளதாவது:

@nivetha_tweets என்பதுதான் என்னுடைய சொந்த ட்விட்டர் கணக்கு. எனது பெயரில் பல போலியான ட்விட்டர் கணக்குகள் உள்ளன. எனவே தான் இப்போது இந்த விடியோவை வெளியிடுகிறேன். என் பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதற்குச் சிறிது காலமெடுக்கும். மேலும் எனது ட்விட்டர் கணக்கை அதிகாரபூர்வமாக்குவதற்கும் சிறிது காலமெடுக்கும். எனவே அனைவரும் இந்தக் கணக்கைப் பின்தொடருங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT