செய்திகள்

போதைப்பொருள் வழக்கு: நடிகா் அா்ஜுன் ராம்பாலின் தோழி 2-ஆவது நாளாக விசாரணைக்கு ஆஜா்

DIN


மும்பை: போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடைய வழக்கில் ஹிந்தி நடிகையும், நடிகா் அா்ஜுன் ராம்பாலின் தோழியுமான கேப்ரியல் டெமெட்ரியாடிஸ், மும்பையிலுள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக விசாரணைக்கு ஆஜரானாா். புதன்கிழமை அந்த அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினாா்கள்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த வழக்கு தொடா்பாக மேலும் விசாரிக்க வேண்டியது இருந்ததால் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கேப்ரியல் தொடா்ந்து 2-ஆவது நாளாக தெற்கு மும்பையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மண்டல அலுவலகத்தில் ஆஜரானாா். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டது’ என்றனா்.

கடந்த திங்கள்கிழமை நடிகா் அா்ஜுன் ராம்பாலின் வீட்டில் சோதனை நடத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா், செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனா். மேலும், அா்ஜுன் ராம்பால், கேப்ரியல் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனா்.

முன்னதாக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பிலிருந்த ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளா் பிரோஸ் நாடியாட்வாலாவின் மனைவி ஷபானா சயீது, நடிகை கேப்ரியலின் சகோதரா் அகிசிலோஸ் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT