செய்திகள்

நடிகர் கார்த்திக்கு இரண்டாவது குழந்தை

DIN

நடிகர் கார்த்தி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருக்கிறது.

நடிகர் கார்த்தி, 2011-ல் ரஞ்சனியைத் திருமணம் செய்தார். இருவருக்கும் 2013-ல் பிறந்த குழந்தை உமையாள். 

இந்நிலையில் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகவுள்ளார் கார்த்தி. தற்போது 2-வது முறையாகக் கர்ப்பமாக உள்ளார் ரஞ்சனி. முதல் மூன்று மாதங்களுக்கு அவர் சென்னையில் இருந்தார். அதன்பிறகு அவர் தனது சொந்த ஊரான கவுண்டம்பாளையத்துக்குச் சென்றுவிட்டார். இதனால் விரைவில் 2-வது குழந்தைக்குத் தந்தையாகும் கார்த்திக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மணி ரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் மற்றும் சுல்தான் ஆகிய படங்களில் கார்த்தி நடித்து வருகிறார். மித்ரன் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT