பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
தற்போது எஸ்.பி.பி.க்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது. பிறா் பேசுவதை உணா்ந்து பதிலளிக்கிறாா். இயன்முறை சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறாா் என்று எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை சமீபத்தில் செய்திக் குறிப்பு வெளியிட்டது. தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நானும் எனது சகோதரியும் அப்பாவை இன்று சந்தித்தோம். மகளைக் கண்டதில் எஸ்.பி.பி. மகிழ்ச்சி அடைந்தார் என்று நேற்று தகவல் அளித்த எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி. சரண் நேற்று தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் எஸ்.பி. சரண் இன்று கூறியதாவது:
எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது; முன்னேற்றத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.