செய்திகள்

முதலில் எனக்கும் சந்தேகம் இருந்தது: கரோனா தடுப்பூசி பற்றி பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி

தடுப்பூசி செலுத்திக்கொள்வதா வேண்டாமா என உங்களைப் போலவே எனக்கும் சந்தேகம் இருந்தது.

DIN

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:

தடுப்பூசி செலுத்திக்கொள்வதா வேண்டாமா என உங்களைப் போலவே எனக்கும் சந்தேகம் இருந்தது. நான் உடல்நலத்துக்காக மருந்துகள் எடுத்து வருகிறேன். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும் தான் 3-வது அலையிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என என்னுடைய மருத்துவர் கூறினார். எனவே தற்போது எடுத்து வரும் மருந்துகளை நிறுத்திக்கொண்டு, கோவிஷீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளேன். நீங்கள் இதுபற்றி முடிவெடுப்பது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் மட்டுமே கலந்தாலோசிக்கவும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT