முகப்பு
செய்திகள்

முதலில் எனக்கும் சந்தேகம் இருந்தது: கரோனா தடுப்பூசி பற்றி பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி

தடுப்பூசி செலுத்திக்கொள்வதா வேண்டாமா என உங்களைப் போலவே எனக்கும் சந்தேகம் இருந்தது.

Updated On : 21 மே 2021, 5:57 pm IST
பகிர்:

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:

Advertisement

Advertisement

தடுப்பூசி செலுத்திக்கொள்வதா வேண்டாமா என உங்களைப் போலவே எனக்கும் சந்தேகம் இருந்தது. நான் உடல்நலத்துக்காக மருந்துகள் எடுத்து வருகிறேன். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும் தான் 3-வது அலையிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என என்னுடைய மருத்துவர் கூறினார். எனவே தற்போது எடுத்து வரும் மருந்துகளை நிறுத்திக்கொண்டு, கோவிஷீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளேன். நீங்கள் இதுபற்றி முடிவெடுப்பது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் மட்டுமே கலந்தாலோசிக்கவும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments