சூர்யா படத்துக்காக இணையும் அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ்
சூர்யாவின் படத்துக்காக அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தலா ஒரு பாடலை பாடியுள்ளனர்.
ஜெய் பீம் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
எதற்கும் துணிந்தவன் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தலா ஒரு பாடலை பாடியுள்ளனராம்.
இதையும் படிக்க | 'யசோதா'வாக களமிறங்கும் சமந்தா : ஐந்துமொழிகளில் உருவாகும் படம் பற்றிய அறிவிப்பு
Advertisement
Advertisement
எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சூரி, புகழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.