''சுவாரசியமா ஏதாச்சும் பண்ணுங்க'' - பிரபல போட்டியாளரைக் கண்டித்த பிக்பாஸ்
பிக்பாஸ் ப்ரமோவில் நாணயத்தை வைத்து சுவாரசியமாக ஏதாவது செய்யுங்கள் என இசைவாணியை பிக்பாஸ் கேட்டுக்கொண்டது.
பிக்பாஸ் ப்ரமோவில் நாணயத்தை வைத்து சுவாரசியமாக ஏதாவது செய்யுங்கள் என இசைவாணியை பிக்பாஸ் கேட்டுக்கொண்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அபிஷேக் ராஜா வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் அவரது நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ஒரு வகையில் பிக்பாஸ் சுவாரசியமாக நகர்வதற்கு காரணமாக இருந்தார்.
இதையும் படிக்க | நடிகர் சிவகுமாரின் 80-வது பிறந்த நாள்: உதாரணக் கலைஞன்
Advertisement
Advertisement
இதனால் அபிஷேக் ராஜா அவ்வளவு எளிதில் வெளியேற மாட்டார் என்பதே அனைவரின் எண்ணம்மாக இருந்தது. இந்த நிலையில் பிக்பாஸை விட்டு அபிஷேக் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 24வது நாள். இன்றைய நாளின் இரண்டாவது ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில், இசைவாணியை கன்ஃபசன் அறைக்கு அழைக்கும் பிக்பாஸ், நெருப்பு ஆற்றலை குறிக்கும் நாணயம் யாரிடம் இருக்கிறது என்று கேட்கிறார். அது தன்னிடம் இருப்பதாக இசைவானி பதிலளிக்க, உங்களுக்கு இருக்கும் சக்திகளை முறையாகவும், சுவாரசியமாகவும் பயன்படுத்தவில்லையே என கடுமையாக சாடியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.