செய்திகள்

''ஜெய் பீம் படம் பார்த்தேன்...'': பிரபல மலையாள இயக்குநர் விமர்சனம்

DIN

நேரம், பிரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெய் பீம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ஜெய் பீம் படம் பார்த்தேன். மிக உணர்வுப்பூர்வமான படம்.

தைரியமான படத்தை தயாரித்தற்காக நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. படக்குழுவினருக்கு எனது அன்பை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

அல்போன்ஸ் தற்போது மலையாளத்தில் பிருத்விராஜ், நயன்தாரா இணைந்து நடிக்கும் கோல்டு படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

பிரேமம் வெளியாகி கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்ரன் தனது அடுத்தப் படத்தை இயக்குகிறார். முன்னதாக ஃபகத் ஃபாசில் நடிக்கும் பாட்டு என்ற படத்தை அல்போன்ஸ் இயக்கவிருப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT