முகப்பு
செய்திகள்

மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடைசெய்யப்பட்ட விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்

விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படம் குவைத், மலேசியா, கத்தார் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 10 பிப்ரவரி 2022, 7:51 pm IST
பகிர்:

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் திரைப்படம் நாளை (பிப்ரவரி 11) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்தப் படத்தில் கௌதம் மேனன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் இந்தப் படம் குவைத், மலேசியா, கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த கருத்துகள் இருப்பதால் இந்தப் படம் தடை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.