முகப்பு
செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்க்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்?

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Updated On : 16 ஆகஸ்ட் 2022, 1:33 pm IST
லோகேஷ் இயக்கும் படத்தில் விஜய்க்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்?
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்கான வேலைகளில் மும்முரமாகியுள்ளார். இதற்கான கதை விவாதத்தில் தனது நண்பரும், சக திரைக்கதை எழுத்தாளருமான ரத்ன குமாருடன் கதை விவாதத்திலும் ஈடுபட்டார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகின. 

மாஸ்டர், விக்ரம், ஆகிய படங்களிலும் ரத்ன குமார் திரைக்கதை எழுதினார். அந்த திரைப்படங்கள் பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது தளபதி 67 திரைப்படத்திலும் திரைக்கதையாசிரியராக ரத்ன குமார் பணியாற்றுகிறார்.

Advertisement

Advertisement

மேலும், தளபதி 67 படத்தின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து இயக்குநர் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு ஏதுவாக தற்போது தளபதி 67 படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

லேகேஷ் படங்களில் வில்லன்களுக்கு பலமான திரைக்கதையும் பின்னணியும் அமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் தளபதி 67 படத்தின் வில்லன் குறித்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே இவர், செல்ஃபி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments