முகப்பு
செய்திகள்

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் - ''எனக்கு இருந்த அறிகுறிகள் இதுதான்'' - ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்

நடிகை ஷோபனா தனக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

Updated On : 10 ஜனவரி 2022, 10:55 am IST
பகிர்:

நாட்டில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகை ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''எல்லா பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொண்டும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. எனக்கு மூட்டுகளில் வலி ஏற்பட்டது. தொண்டையில் கரகரப்பு இருந்தது. பின்னர் தொண்டை புண்ணாக மாறியது. 

ஆனால் அது முதல் நாள் மட்டும் தான். பின்னர் எனது அறிகுறிகள் மெல்ல குறையத் துவங்கின. நான் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் அது என்னை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துள்ளது. ஆகையால் எல்லாோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments