முகப்பு
செய்திகள்

6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய திரைப்படம்: சிறந்த நடிகர் வில் ஸ்மித்... - முழு விவரம்

94வது ஆஸ்கர் விருது வென்ற படங்கள்  குறித்த முழு விவரம் 

Updated On : 28 மார்ச் 2022, 11:28 am IST
பகிர்:

94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் விருதுகள் பெற்ற  படங்கள் மற்றும் கலைஞர்கள் குறித்த முழு விவரங்கள் பட்டியல் இதோ. 

ஆஸ்கர் விழாவில் சிறந்த படமாக சியான் ஹெடர் இயக்கிய 'கோடா' (Coda)தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக 'கிங் ரிச்சர்டு' படத்துக்காக வில் ஸ்மித் சிறந்த நடிகராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் சிறந்த திரைக்கதை (தழுவல்) விருதை 'கோடா' படத்துக்காக சியான் ஹெடர் பெற்றார். மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருதை 'கோடா' படத்துக்காக வென்ற டிராய் கோட்சூர், ஆஸ்கர் விருதை வென்ற முதல் காது கேளாதவர் என்ற பெருமையை பெற்றார். 

Advertisement

Advertisement

சிறந்த சர்வதேச திரைப்படமாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 'டிரைவ் மை கார்' திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றது. 

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு என்ற ஆறு விருதுகளை 'டுன்' திரைப்படம் வென்றது. 

'டுன்' படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருதை ஜோ வாக்கரும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர்களாக பேட்ரிஸ் வெர்மெட் மற்றும் சூசன்னா சிபோஸும், சிறந்த பின்னணி இசைக்காக ஹான்ஸ் ஜிம்மரும் ஆஸ்கர் விருது பெற்றனர். 

சிறந்த நடிகையா 'தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே' படத்துக்காக ஜெசிகா சாஸ்டெயின், சிறந்த அனிமேசன் படமாக 'என்காண்டோ', சிறந்த துணை நடிகையாக ஹரியானா டிபோஸ்,  சிறந்த திரைக்கதையாசிரியராக 'பில்ஃபெஸ்ட்' படத்துக்காக சர் கென்னித் ப்ரானாவும் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக 'க்ரூயெல்லா' படத்துக்காக ஜென்னி பீவனும் பெற்றனர்.

சிறந்த ஆவணப்படமாக 'சம்மர் ஆஃப் சோல்', சிறந்த அனிமேஷன் குறும்படமாக 'தி விண்ட்ஷில்ட் வெப்பரும், சிறந்த ஆவண குறும்படமாக தி 'குயின் ஆஃப் பாஸ்கெட்பால்' ஆகிய படங்கள் விருதுகளை வென்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments