இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா முரளியுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படமான 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யூ ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், 2024-ல் இப்படம் வெளியாகும் எனத் தயாரிப்புத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் கங்குவா படப்பிடிப்பு!
இப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், ரஹ்மான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.