ஆள் பாதி, ஆடை பாதி என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நடிகை உர்ஃபி ஜாவத்துக்குப் பொருந்தும். காரணம், கவர்ச்சியான ஆடைகளை அணிந்து பிரபலமான உர்ஃபி, பல முறை தன் ஆடைகளால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார்.
இந்நிலையில், மும்பையில் இன்று காலை காபி அருந்துவதற்காக அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். அங்கு, திடீரென அவரைச் சூழ்ந்த பெண் காவலர்கள் உர்ஃபி ஜாவத்தைக் கைது செய்வதாகக் கூறி வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
காரணமாக, பொது இடத்தில் முழு முதுகும் தெரியும்படி அநாகரிகமான ஆடையை அணிந்து வந்தததாலேயே கைது செய்ததாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், உர்ஃபியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.