முகப்பு
செய்திகள்

நாடி நரம்பெல்லாம்... நெஞ்சமே பாடலைப் பாராட்டிய செல்வராகவன்

மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சமே..நெஞ்சமே’ பாடலைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

Updated On : 4 ஜூலை 2023, 5:59 pm IST
பகிர்:

மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சமே..நெஞ்சமே’ பாடலைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ராசாக்கண்ணு’, ‘நெஞ்சமே..நெஞ்சமே’ பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 

Advertisement

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தன் டிவிட்டர் பக்கத்தில், “தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று !! நெஞ்சமே..நெஞ்சமே ஐயா ஏ.ஆர்.ரஹ்மான். தலைவா! நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம். என்ன ஒரு வரிகள் யுகபாரதி” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.