ஓய்விற்காக வெளிநாடு சென்ற விஜய்!
நடிகர் விஜய் ஓய்விற்காக வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்துகட்ட பணிகள் துவங்கியுள்ளன.
இப்படத்திற்குப் பின், விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: வெளியானது கக்கன் டிரைலர்!
இப்படத்திற்கு ‘சிஎஸ்கே’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுப்பதற்காக நேற்று விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.