முகப்பு
செய்திகள்

'சீதாராமன்' தொடரில் புதிதாக களமிறங்கும் 'தெய்வமகள்' வில்லி!

'தெய்வமகள்' தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துவந்த ரேகா கிருஷ்ணப்பா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 15 மார்ச் 2023, 5:22 pm IST
பகிர்:

'தெய்வமகள்' தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துவந்த ரேகா கிருஷ்ணப்பா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2013 முதல் 2018 வரை ஒளிபரப்பான தொடர் தெய்வமகள். திருமதி செல்வம் தொடரை இயக்கிய குமரன் இயக்கத்தில் உருவான 'தெய்வமகள்' தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. 

வாணி போஜன், கிருஷ்ணா மற்றும் ரேகா கிருஷ்ணப்பா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் நடித்த வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

ரேகா கிருஷ்ணப்பா எதிர்மறையான (வில்லி) பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். அவர் சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை தொடரில் நடிக்கவுள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் அவர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்மறை பாத்திரங்களில் நடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்த ரேகாவுக்கு இந்தத் தொடரில் எந்தவிதமான கதாபாத்திரம் அமையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தத் தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி எதிர்மறை பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ரோஜா புகழ் பிரியங்கா நல்காரி நாயகியாக நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments