செய்திகள்

இணையத் தொடரில் நாயகனாக சூரி!

DIN

நடிகர் சூரி இணையத் தொடரில் நாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்.

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து கருடன் படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் வெற்றிப்படமானதால், கதைநாயகனாக ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்க்கப்பட்ட சூரி, ஆக்சன் நடிகராகவும் வளர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அடுத்ததாக, இவர் நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் ஆக.23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், சூரி கதையொன்றை எழுதி வருகிறாராம். மதுரை பின்னணியில் உருவாகும் இதனை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி இணையத் தொடராக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக, இணையத் தொடரில் சூரி நாயகனாக அறிமுகமாகும் தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT