புஷ்பா - 2 திரைப்படத்திற்கு அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் தெலங்கானா உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று இரவு 9.30 மணியிலிருந்து திரையிடப்படுகிறது.
கிட்டத்தட்ட 12,000 திரைகளில் வெளியாகும் படமென்பதால் உலகம் முழுவதும் பல ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: சூர்யா - 45 படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா!
முக்கியமாக, இப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 300 கோடியை ஈட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையிடுவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு வாயிலாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அல்லு அர்ஜுன் ஏன் பூலோக நட்சத்திர நடிகர்? இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத வரவேற்பு புஷ்பா - 2 படத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸை தகர்க்கும். அல்லு அர்ஜுன் புஷ்பா -2 படத்திற்கு மட்டும் ரூ. 287.36 கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார். உலகில் வேறு எந்த நடிகருக்கும் இந்த உயரங்கள் அமைந்தது கிடையாது. அல்லு அர்ஜுன்தான் உண்மையான உச்ச நட்சத்திரம்” எனத் தெரிவித்துள்ளார்.
புஷ்பா - 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் இந்திய திரைத்துறையினரிடம் மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.