‘வுல்வரின்’ பட நேர்காணலில் முதலில் தேர்வாகவில்லை! மறக்க முடியாத அனுபவத்தைப் பகிர்ந்த ஹக் ஜாக்மேன்!
பிரபல ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன் வுல்வரின் தொடக்க காலத்து அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
மார்வெல் காமிக்ஸின் மூலம் பிரபலமான டெட்பூல், வுல்வரின் நாயகர்கள் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்கள். இதற்கு ‘டெட்பூல் வுல்வரின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வுல்வரின் படத்து நாயகன் ஹக் ஜாக்மேனை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் 2007 முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் படம் 2008இல் வெளியானது. இதுவரை 33 படங்கள் இந்த யுனிவர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பு, படப்பிடிப்பு, வெளியீட்டுக்கு தயாராகுதல் என 11 படங்கள் பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன.
உலக அளவில் இதுவரை அதிகமாக வசூலித்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்றால் அது இதுதான். 29.8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,980 கோடி டாலர்) வசூலித்து அசத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ஆங்கில இதழில் பேட்டியளித்த நடிகர் ஹக் ஜாக்மேன் கூறியதாவது:
வுல்வரின் படத்துக்கான ஆடிசனில் (நேர்காணலில்) நான் கிட்டதட்ட தோல்வியுற்றேன். எனக்கு நீங்கள் (மார்வெல் ஸ்டூடியோஸ் தலைவர்) அப்போது உணவு அளித்திருக்க வேண்டிய அவசியமில்லை. உணவும் வாங்கிக்கொடுத்து விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்ததை நான் என் வாழ்வில் மறக்கவே மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
தற்போதைய மார்வெல் ஸ்டூடியோஸின் தலைவர் (கெவின் பெய்கி) அப்போது தயாரிப்பாளரின் உதவியாளராக இருந்தார்.
ஆரம்பத்தில் வுல்வரின் கதாபாத்திரத்துக்கு டக்ரே ஸ்காட் தேர்வாகியிருந்தார். இவருக்கு மிஷன் இம்பாசிபல் 2 திரைப்படம் படப்பிடிப்பு வேலை இருந்தது. அப்போது டாம் குருஸ் 2 படங்களில் நடிக்க அனுமதி வழங்கவில்லை. அதனால் இவர் வுல்வரின் பட வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வுல்வரின் கதாபாத்திரம் வைத்து 9 படங்கள் வெளியாகிவிட்டன. தற்போது 10ஆவது படமாக ‘டெட்பூல் வுல்வரின்’ வெளியாகவுள்ளது. இந்தப் படம் வரும் ஜூலை 26ஆம் நாள் வெளியாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.