அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணியில் உருவாகும் படம் கைவிடப்பட்டதாகத் தகவல்.
அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரம்மாண்ட பொருள் செலவில் உருவான புஷ்பா - 2 வசூல் சாதனையை நிகழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா - 2 படத்திற்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் தன் சம்பளத்தை ரூ.150 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
இப்படத்திற்குப் பின், இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என பேசப்பட்டது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் அட்லி கதை விவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணி திரைப்படம் கைவிடப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா இல்லை புரளியா என்பது புஷ்பா - 2 வெளியீட்டுக்குப் பின்பு தெரியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.