அட்லி - அல்லு அர்ஜுன் திரைப்படம் கைவிடப்பட்டதா?
அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணியில் உருவாகும் படம் கைவிடப்பட்டதாகத் தகவல்.
அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரம்மாண்ட பொருள் செலவில் உருவான புஷ்பா - 2 வசூல் சாதனையை நிகழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா - 2 படத்திற்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் தன் சம்பளத்தை ரூ.150 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
Advertisement
Advertisement
இப்படத்திற்குப் பின், இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என பேசப்பட்டது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் அட்லி கதை விவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணி திரைப்படம் கைவிடப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா இல்லை புரளியா என்பது புஷ்பா - 2 வெளியீட்டுக்குப் பின்பு தெரியலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.