துணிவு படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
’மங்காத்தா’ படத்துக்குப் பின், நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் ஆரவ், ரெஜினா, சஞ்சய் தத், அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தீபாவளிக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், “ஞாயிறு மாலை 7.03 மணி “ என பதிவிட்டு லைகா நிறுவனத்தை டேக் செய்துள்ளார்.
இதற்கு லைகா நிறுவனமும், “ஞாயிறு மாலை 7.03 மணி” எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்கள்.
குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.