பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!
சன் டிவியில் 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிரியமான தோழி தொடர் நிறைவு பெற்றது.
சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பிரியமான தோழி தொடர் நிறைவு பெற்றுள்ளது.
இத்தொடரில் விக்கி ரோஷன், சான்ரா பாபு, தீப்தி ராஜேந்தர் ஆகியோர் பிரதான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்தொடரின் இறுதி கட்ட காட்சிகள் நேற்று(மே. 5) ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாகியது.
கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிரியமான தோழி தொடர் 604 எபிசோடுகளுடன் நேற்று நிறைவு பெற்றது.
Advertisement
Advertisement
இந்நிலையில், பிரியமான தோழி தொடர் நிறைவடைந்துள்ளதால், புன்னகை பூவே என்ற புதிய தொடர் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அருவி தொடர் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இலக்கியா தொடர் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. லட்சுமி தொடர் பிற்பகல் 2.30 மணிக்கும், மலர் தொடர் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.