இரும்புக் கை மாயாவி திட்டத்தில் லோகேஷ் கனகராஜ்?
இரும்புக் கை மாயாவி குறித்து...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இரும்புக் கை மாயாவி கதையைத் திரைப்படமாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து லோகேஷ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். அதற்கான பணிகளே இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் லோகேஷுடன் இணைவார் எனத் தெரிகிறது.
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் சூர்யாவுக்குச் சொன்ன இரும்புக் கை மாயாவி கதையை நடிகர் அல்லு அர்ஜுனுக்குச் சொன்னதாகவும் அக்கதையையே படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: கன்னட ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட ரன்வீர் சிங்!
summary