பாடகர் ஜெயச்சந்திரன்  கோப்புப் படம்
செய்திகள்

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (ஜன. 9) காலமானார்.

DIN

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (ஜன. 9) காலமானார். அவருக்கு வயது 80.

கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் பிறந்த ஜெயச்சந்திரன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தமிழில், வசந்தகால நதியினிலே, கவிதை அரங்கேறும் நேரம், ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, அந்தி நேர தென்றல் காற்று... உள்ளிட்ட பலர் சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், ஒரு தெய்வம் தந்த பூவே... கிழக்குச் சீமையிலே படத்தில் கத்தாழம் காட்டுவழி... ஆகிய பாடலை பாடியிருந்தார்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, ஐந்து முறை கேரள மாநில திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். நான்குமுறை தமிழ்நாடு மாநில விருதுகளை வென்றுள்ளார்.

இதையும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சுஸுகி 2 சக்கர வாகன விற்பனை சரிவு

கிராமப் புறங்களில் இருக்கும் வளா்ச்சி திண்டுக்கல் நகரில் இல்லை: எம்எல்ஏ குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT