தொடர்ந்து ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த தனுஷ்!
தனுஷின் திரைப்பட வெற்றி குறித்து...
நடிகர் தனுஷ் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருக்கிறார். 20 ஆண்டுகளாக சினிமாவிலிருப்பவர் இளம் வயதிலேயே 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் படங்கள் மீது ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
முக்கியமாக, 2022-ல் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் தன் முதல் ரூ. 100 கோடி படத்தைக் கொடுத்த தனுஷ் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாத்தி (ரூ.118 கோடி), ராயன் (ரூ.156 கோடி) படங்களின் மூலம் தன்னை வணிக ரீதியாகவும் பலப்படுத்திக்கொண்டார்.
Advertisement
Advertisement
தற்போது, குபேரா படமும் உலகளவில் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளது. இதனால், கேப்டன் மில்லர் (ரூ. 85 கோடி) படத்தைத் தவிர கடந்த 4 ஆண்டுகளில் 4 ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் படங்களை தனுஷ் கொடுத்துள்ளது அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: நான் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணம்: லால்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.