ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி கதாபாத்திரம் குறித்து...
நடிகர் வசந்த் ரவி ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்துள்ளது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாள்களுக்கும் மேல் கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
ரஜினியுடன் பல நட்சத்திர நடிகர்களும் இணைந்துள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் இந்தியளவில் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்த புகைப்படங்களை வெளியிட்டதில் அதில் ஜெயிலர் முதல் பாகத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த வசந்த் ரவியும் இடம்பெற்றிருந்தார். ஜெயிலரில் அவரை ரஜினியே சுட்டுக்கொல்வது போல் எடுக்கப்பட்டிருந்தது. தற்போது, இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளது ரசிகர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனால், இரண்டாம் பாகத்தில் பிளாஷ்பேக்-ல் வசந்த் ரவிக்கான காட்சி இடம்பெறலாம் என்றும் தெரிகிறது. அதனாலேயே இவ்வளவு நாள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இறுதிக்கட்டத்தில் அவருக்கான காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக ஊகிக்கப்படுகிறது.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ. 160 கோடிக்குப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
Actor Vasanth Ravi's role in the film Jailer 2 has sparked considerable interest
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.